நரம்பு தளர்ச்சி பித்தம், கால்சியம் குறைபாடு, குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள், தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வரண்ட கூந்தல், முகத்தில் ஏற்படும் வறட்சி போன்ற பிரச்சினைகள் உள்ள அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்".
பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று. ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே உண்ணவேண்டும் ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு.
இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும். இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.
பல் எழும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு விளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம் மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிக உதிரபோக்கு, வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் பாம்புகடியின் வீரியத்தை குறைக்க வல்லது. இது அகத்தியர் குணபாடத்தில் கனிகளிலேயே முதன்மையானது விளாம்பழம் என்பதையும் நோக்குவோம். பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற குறிப்பையும் கவனிப்போம் .
யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம் இதை சாப்பிடும் போது உள்ளே உள்ள சதைகளை மட்டுமே கிரகித்து கொண்டு ஓடு மட்டுமே சாணத்தில் இருக்கும் அதை உடைத்து பார்த்தால் ஏதோ சாம்பல் மாதிரி இருக்கும்.
பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முகச்சுருக்கம், வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ பூச்சுகளோ கிடையாது. தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும்!. மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணாமல் போகும்.
கிராமங்களில், காமத்திற்காக அதிக பெண்களை தேடும் நபருக்கு அவருக்கே தெரியாமல் அவரது மனைவியோ அம்மாவோ இந்த ஓட்டின் பவுடரை பொடி ஆக்கி உணவில் கலந்து ஆண்களுக்கு கொடுக்க விந்தணு நீர்த்து போவது மட்டுமல்ல காம உணர்ச்சி முற்றிலும் மட்டுப்படும் "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு" என்பதற்கு இது தான் பொருள்.

No comments:
Post a Comment